தல வரலாறு:
திருச்செந்தூர் ஆறுபடை வீடுகளில் இரண்டாவது படைவீடு. சந்தன மலையைக் குடைந்து இத்திருக்கோவில் ஓம் என்ற பிரணவ வடிவில் கட்டப்பட்டுள்ளளது. வீர மகேந்திரத்தில் தேவர்களுக்குத் துயர் கொடுத்த சூரபத்மனை மறக்கருணையால் ஆட்கொள்ள அவரித்தான் முருகப்பெருமான். வுpயாழபகவான்(தேவகுரு) அறிவுரைப்படி திருச்செந்தூரில் படைவீடு அமைத்து தேவதச்சனால் (மயன்) உருவாக்கப்பட்டது. மூலவர் பாலசுப்பிரமணியர் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். திருக்கரத்தில் தாமரை மலரோடு சிவபெருமானைப் பூஜை செய்யும் வண்ணம். ஒருகரத்தில் ஜெபமாலை, ஒருகையில் சக்தி ஹஸ்தம், ஒரு கரத்தில் தாமரை மலர் இவைகளுடன் தவக்கோலத்தில் எழுந்தருளியுள்ளார். முருகப்பெருமான் சூரபத்திரமனை வென்றபின் சிவபெருமானை வழிபட்ட புண்ணியத்தவம் இதுவாகும். திருச்சீரலைவாய், ஜெயந்திபுரம் செந்தில் ஊர், திருச்செந்தூர் என்று இவ்வூர் அழைக்கப்படுகிறது. சங்க நூல்களை அகநானூறு, புறநானூறு, தொல்காப்பியம், சிலப்பதிகாரம், திருமுருகாற்றுபடை ஆகிய நூல்கள் செந்தூரை புகழ்ந்து பாடுகின்றன. மேலைக்கோபுர வாசலில் 137அடி உயரமும், 90அடி அகலமும் உள்ள ராஜகோபுரம் அழகிய சிற்பவேலைப்பாடுகள் நிறைந்து காணப்படுகிறது. எங்கிருந்து பார்த்தாலும் ராஜகோபுரம் கம்பீரமாக விண்ணைமுட்டி உயர்ந்து நிற்கிறது. கோபுரதரிசனம் கோடிப்புண்ணியம் என்பதற்கு எடுத்துக்காட்டாக இது அமைக்கப்பட்டுள்ளது. பிற இடங்களிலெல்லாம் திருக்கோயில்கள் அமைக்கப்பட்டு முருகவழிபாடு நடைபெறுகின்றது. யானை முகப்பெருமான்தான் சிவபெருமானுடைய மூத்த பிள்ளையார். இளைய பிள்ளையார் முருகப்பிரான். ஆனால் இரு பிள்ளையார்களும் சிவபெருமான் எடுத்த வேறு திருமேனிகளெ ஆதலின் இவர்கள் இருவரும் சிவபெருமானன்றி வேறல்லர். நம் செந்தில் மேய வள்ளி மணாளர்க்குத் தாதை கண்டாய் என்று திருமறைக்காட்டுத் தேவராத்தில் செந்திற் பெருமானைப் பாடியிருக்கின்றார் திருநாவுக்கரசு நாயனார். இவ்வூர் பண்டைக்காலத்தில் அலைவாய்ச் செந்தில் என்று பெயர் பெற்றிருந்தது. இது கடற்கரை மேல் அலைவாயில் இருந்ததால் அலைவாய், சீர் அலைவாய் என்று பெயர் பெற்றது. முருகன் செந்நிறம் உடைமையால் சேந்தன் எனப்பெறுகிறான். சிவந்த நிறமுடைய சேந்தனுக்கு இக்கோயில் இல்லாக இருத்தலினாலே இது செந்தில் எனப் பெறுவதாயிற்று. தேவாரக் காலம் வரை இது அலைவாய் செந்தில் என்று அழைக்கப்பட்டுப் பின் செந்தில் ஊர் என்றும் பெயர் பெற்றது. செந்தில் ஊர் செந்தூர் திருச்செந்தூர் என்றாயிற்று. அருணகிரிநாதர் காலத்தில் திருச்செந்தூர்; என்று திருப்புகழில் வழங்கவும் பெற்றது. சே-சிவந்த நிறம் சேந்தன் சேய் என்பன இதன் அடியாக வந்தனவே. பெருமானைச் செந்திலாண்டவன் முருகன் என்ற பெயர்களால் அடியார்கள் வாய் குளிரப் புகழ்ந்து மகிழ்கின்றார்கள். சண்முகர் திருக்கல்யாணக் கோலத்தில் வள்ளி தெய்வானையோடு தெற்கு நோக்கி மூல உற்சவராய்க் காட்சி தருகிறார். ஆவணி, மாசி ஆகிய மாதங்களில் உருகு சட்ட சேவை தந்து வெட்டிவேர்ச் சப்பரத்தில் எழுந்தருளி சிவப்பு சாத்தியிலும், வெள்ளளைச்சாத்தியிலும், பச்சைசாத்தியிலும் சண்முகர் அருள் பாலிக்கிறார். உற்சவமூர்த்தி அருள்மிகு ஜெயந்திநாதர் தங்கரதத்தில் எழுந்தருளி உலாவரும் காட்சி அனைவரும் காண வேண்டிய சிறப்புடையது. சண்முகார்ச்சனையும், தாரா அபிஷேகமும் சிறப்புடையனவாகும்
. தேவர்கள் தங்களை தொந்தரவு செய்த, சூரபத்மனை அழிக்கும்படி சிவபெருமானிடம் முறையிட்டனர். அவர்களது வேண்டுதலை ஏற்ற சிவன், தன் நெற்றிக்கண்ணில் இருந்து ஆறு பொறிகளை உண்டாக்கினார். அதிலிருந்து முருகப்பெருமான் தோன்றினார். பின், சிவபெருமானின் கட்டளையை ஏற்று, சூரபத்மனை அழிக்க இங்கு வந்தார். இவ்வேளையில் முருகப்பெருமானின் தரிசனம் வேண்டி, தேவர்களின் குருவான வியாழ பகவான் இத்தலத்தில் தவமிருந்தார். அவருக்கு காட்சி தந்த முருகப்பெருமான், இவ்விடத்தில் தங்கினார். அவர் மூலமாக அசுரர்களின் வரலாறையும் தெரிந்து கொண்டார். அப்போது தனது படைத்தளபதியான வீரபாகுவை, சூரபத்மனிடம் தூது அனுப்பினார். அவன் கேட்கவில்லை. பின்பு, முருகன் தன் படைகளுடன் சென்று, அவனை வதம் செய்தார். வியாழ பகவான், முருகனிடம் தனக்கு காட்சி தந்த இவ்விடத்தில் எழுந்தருளும்படி வேண்டிக்கொண்டார். அதன்படியே முருகனும் இங்கே தங்கினார். பின்பு, வியாழ பகவான் விஸ்வகர்மாவை அழைத்து, இங்கு கோயில் எழுப்பினார். முருகன், சூரனை வெற்றி பெற்று ஆட்கொண்டதால் இவர், "செயந்திநாதர்' என அழைக்கப்பெற்றார். பிற்காலத்தில் இப்பெயரே "செந்தில்நாதர்' என மருவியது. தலமும் "திருஜெயந்திபுரம்' (ஜெயந்தி - வெற்றி) என அழைக்கப்பெற்று, "திருச்செந்தூர்' என மருவியது.
ஸ்ரீ ஆதிசங்கரர்
ஆதிசங்கரர் (சமற்கிருதம்: Ādi Śaṅkara), ஏழாம் நூற்றாண்டு இன்றைய கேரளத்திலுள்ள "காலடி" எனப்படும் ஊரில் ஆர்யாம்பாள்/சிவகுரு தம்பதியினருக்கு மகனாய் தோன்றிய மெய்ஞான வல்லுநர்.
இளமை பிராயத்தில் கௌடபாதர் சீடரான கோவிந்த பகவத்பாதர் இடம் வேதாந்தம் மற்றும் இதர தத்துவங்கள் பயின்று சங்கர பகவத்பாதர் என்று அழைக்கலானார்.
வேதிய உபநிஷத்கள் மற்றும் பாதராயணர் இயற்றிய பிரம்ம சூத்திரங்களுக்கு விளக்கவுரை அளித்து அவை போதிக்கும் அத்வைத வேதாந்தம் அதாவது இரண்டிண்மை என்கிற தத்துவத்தை உலகத்திற்கு எடுத்துக்காட்டியவர். இது மற்றும் அல்லாது பகவத் கீதை, விஷ்ணு சஹஸ்ரநாமம் போன்ற சமய நூல்களுக்கும் இவர் விளக்கவுரை நிருவியுள்ளதாக பொது கருத்து. சிவானந்த லஹரி, பஜ கோவிந்தம், விவேக சூடாமணி, உபதேச சாஹஸ்ரி, கனகதாரா ஸ்தோத்திரம், சுப்ரஹ்மண்ய புஜங்கம் போன்ற நூல்களை இயற்றியுள்ளார்.
இந்திய துணைக்கண்டம் முழுவதும் பிரயாணித்து தெற்கில் சிருங்கேரி, மேற்கில் துவாரகா, வடக்கில் பதரிநாத் மற்றும் கிழக்கில் பூரி என்ற இடங்களில் நான்கு அத்வைத பீடங்கள் நிறுவி தன் சீடர்களான ஹஸ்தமாலகர், சுரேஸ்வரர், பத்மபாதர் மற்றும் தோடகர் என்பவர்களை ஒவ்வொரு பீடத்திற்கும் மடாதிபதிகளாக நியமித்தார். தமது 32ஆம் அகவையில் மரணம் அடைந்த இவர் பொது நம்பிக்கையில் இந்து மதத்தின் மாபெரும் பிரமுகர் என்று கருதப்படுகிறார்.
ஸ்ரீ ஆதிசங்கரர் அருளிய
ஸப்ரஹுமண்ய புஜங்கம்
ஸதா பாலரூபாபி விக்னாத்ரிஹுந்த்
மஹாதந்தி வக்த்ராபி பஞ்சாஸ்யமான்யா
விதீந்த்ராதிம்ருக்யா காணசாபிதாமே
விதத்தாம் ச்ரியம் காபி கல்யாண மூர்த்தி (1)
ந ஜானாமி சப்தம் ந ஜானாமி சார்த்தம்
ந ஜானாமி பத்யம் ந ஜானாமி கத்யம்
சிதேகா ஷடாஸ்யா ஹுருதி தயோததே மே
முகாந்நிஸ்ஸரந்தே கிரஸ்சாபி சித்ரம் (2)
மயூராதிரூடம் மஹாவாக்ய கூடம்
மனோஹாரிதேஹும் மஹுத்சித்த கேவம்
மஹீதேவதேவம் மஹாவேத பாவம்
மஹாதேவ பாலம் பஜே லோகபா லம் (3)
யதா ஸந்நிதானம் கதாமானவா மே
பாவம் போதிபாரம் கதாஸ்தே ததைவ
இதி வ்யஞ்ஜயன் ஸிந்து தீரேய ஆஸ்தே
தமீடே பவித்ரம் பராசக்தி பஉத்ரம் (4)
யதாப்தேஸ்தரங்கா லயம் யாந்தி துங்கா
ததைவாபத ஸந்நிதௌ ஸேவதாம் மே
இதீவோர்மிபங்தீர் ந்ருணாம் தர்சயந்தம்
ஸதா பாவயே ஹுருத்ஸரோஜே குஹும் தம் (5)
கிரௌ மந்நிவாஸே நரா யேஸ்தி ரூடா
ததா பார்வதே ராஜதே தேஸ்தி ரூடா
இதீவ் ப்ருவன் கந்தசைலாதி ரூடா
ஸதேவோ முதேமே ஸதா ஷண்முகோஸ்து (6)
மஹாம்போதி தீரே மஹாபாபசோரே
முனீந்த்ரானுகூலே ஸகந்தாக்யசைலே
குஹாயாம் வஸந்தம் ஸ்வபாஸா வஸந்தம்
ஜனார்திம் ஹுரந்தம் ச்ரயாமோ குஹும்தம் (7)
லஸத்ஸ்வர்ணகேஹு ந்ருணாம் காமதோEஹு
ஸHமஸ்தோம ஸஞ்ச்சன்ன மாணபக்ய மஞ்சே
ஸமுத்யஸ் ஸ்ஹுஸ்ரார்க துல்ய ப்ரகாசம்
ஸதாபாவயே கார்த்திகேயம் சுரேசம் (8)
ரணத்தம்ஸகே மஞ்சுளேத்யந்த சோணே
மனோஹாரி லாவண்ய பீயூஷபூர்ணே
மனஷ்ஷட்பதோ மே பவக்லேசதப்த
ஸதா மோததாம் ஸ்கந்த தே பாதபத்மே (9)
ஸவர்ணாபதிவ்யாம்பரைர் பாஸமானாம்
க்வணத்கிங்கிணீ மேகலா சோபமானாம்
லஸத்தேம பட்டேன வித்யோதமானாம்
கடிம் பாவயே ஸ்கந்த தே தீப்ய மானாம் (10)
புளந்தேச கன்யாக நாபோக துங்க
ஸ்தனாலிங்க நாஸக்த காச்மீரராகம்
நமஸ்யாம்யஹும் தாரகாரே தவோர
ஸ்வபக்தாவனே ஸர்வதா ஸானுராகம் (11)
விதௌக்லுப்த தண்டான் ஸ்வலீலாத்ருதாண்டான்
நிரஸ்தே பகண்டான் த்விஷத்காலதண்டான்
ஹுதேந்த்ராரிஷண்டான் ஜகத்ராண சௌண்டான்
ஸதாதே ப்ரசண்டான் ச்ரயே பாஹுதண்டான் (12)
ஸதா சாரதா ஷண்ம்ருகாங்கா யதி ஸ்யு
ஸமுத்யந்த ஏவ ஸ்திதாச்சேத் ஸமந்தாத்
ஸதா பூர்ணபிம்பா கலங்கைஸ்ச ஹீனா
ததா த்வன்முகானாம் ப்ருவே ஸ்கந்த ஸாம்யம் (13)
ஸ்புரன் மந்தஹாஸை ஸஹும்ஸானி சஞ்சத்
கடாக்ஷaவலீப்ருங்க ஸங்கோ ஜ்வலானி
ஸHதாஸ்யந்தி பிம்பா தராணீச ஸனோ
தவாலோகயே ஷண்முகம் போரு ஹாணி (14)
விசாலேஷH கர்ணாந்த தீர்க்கேஷ் வஜஸ்ரம்
தயாஸ்யந்திஷ த்வாதசஸ் வீக்ஷணேஷ
மயீஷத் கடாக்ஷ ஸக்ருத் பாதித ஸ்சேத்
பவேத்தே தயாசீல கா நாமஹானி (15)
ஸHதாங்கோத் பவோ மேஸி ஜீவேதி ஷட்தா
ஜபன்மந்த்ரமீசோ முதா ஜிக்ரதே யான்
ஜகத்பாரபருத்யோ ஜகந்நாத தேப்ய
கிடோஜ்வலேப்யோ நமோ மஸ்தகேப்ய (16)
ஸ்புரத்ரத்fன கேயூரஹாராபிராம
ஸ்சலத் குண்டல ச்லஸத் கண்டபாக
கடௌ பீதவாஸா கரே சாருசக்தி
புரஸ்தான் மமாஸ்தம் புராரேஸ் தனூஜ (17)
இஹாயாஹி வத்ஸேதி ஹுஸ்தான் ப்ரஸார்யா
ஹுவயத்யாதராச் சங்கரே மாதுரங்காத்
ஸமுத்பத்ய தாதம் ச்ரயந்தம் குமாரம்
ஹுராஸ்லிஷ்டகாத்ரம் பஜே பாலமூர்த்திம் (18)
குமாரேச ஸJனோ குஹு ஸ்கந்த ஸேனா
பதே சக்தி பாணே மயூரா திரூட
புளிந்தாத்மஜாகாந்த பக்தார்த்தி ஹாரின்
ப்ரபோ தாரகாரே ஸதா ரக்ஷமாம் த்வம் (19)
ப்ரசாந்தேந்த்ரியே நஷ்டஸம்க்ஞே விசேஷ்டே
கபோத்காரி வக்த்ரே பயோத்கம்பி காத்ரே
ப்யாணோன்முகே மய்யநாதே ததானீம்
த்ருதம் மே தயாளோ பவாக்ரே குஹுத்வம் (20)
க்ருதாந்தஸ்ய தூதேஷH சண்டேஷகோபா
த்தஹுச்சின்தி பிந்தீதி மாம் தர்ஜயத்ஸ
மயூரம் ஸமாருஹுfய மாபைரிதி த்வம்
புர சக்திபாணிர் மமாயாஹி சீக்ரம் (21)
ப்ரணம்யா ஸக்ருத் பாதயோஸ்தே பதித்வா
ப்ரஸாத்ய ப்ரபோ ப்ரார்த்தயேஸனேக வாரம்
நவக்ரும் க்ஷமோஹும் ததானீம் க்ருபாப்தே
நகார்யாந்தகாலே மனாகப்யுபேக்ஷa (22)
ஸஹுஸ்ராண்ட போக்தா த்வயா ஸJரநாமா
ஹுதஸ்தாரக ஸிம்ஹுவக்த்ரச்ச தைத்ய
மமாந்தர் ஹுருதிஸ்தம் மன க்லேசமேகம்
ந ஹும்ஸி ப்ரபோ கிம் கரோமி க்வயாமி (23)
அஹும் ஸர்வதா துக்கபாரா வஸந்நோ
பவான் தீனபந்து ஸத்வதன்யம் நயாசே
பவத்பக்தி ரோதம் ஸதா க்லுப்த பாதம்
மமாதிம் த்ருதம் நாசயோமா ஸHதத்வம் (24)
அபஸ்மார குஷ்ட க்ஷயார்ச ப்ரமோஹு
ஜ்வரோன்மாத குல்மாதிரோஹான் மஹாந்த
பிசாசஸ்ச ஸர்வே பவத் பத்ர பூதிம்
விலோக்ய க்ஷணாத் தார காரே த்ரவந்தே (25)
த்ருசி ஸ்கந்த மூர்த்தி ச்ருதௌ ஸ்கந்தகீர்த்தி
முகே மே பவித்ரம் ஸதா தச்சரித்ரம்
கரே தஸ்ய கருத்யம் வபுஸ்தஸ்ய ப்ருத்யம்
குEஹு ஸந்து லீனா மமாசேஷ பாவா (26)
முனீனா முதாஹோ ந்ருணாம் பக்தி பாஜா
மபீஷ்டப்ரதா ஸந்தி ஸர்வத்ர தேவா
ந்ருணாமந்த்ய ஜாநாமபி ஸ்வார்த்ததானே
குஹாத்தைவமன்யம் நஜானே நஜானே (27)
களத்ரம் ஸதா பந்துவர்க பசுர்வா
நரோவாத நா க்ருEஹு யே மதீயா
யஜந்தோ நமந்த ஸ்துவந்தோ பவந்தம்
ஸ்மரன் தஸ்ச்ச தே ஸந்து ஸர்வே குமார (28)
ம்ருகா பக்ஷணோ தம்சகாயே சதுஷ்டா
ததா வ்யாதயோ பாதகா யே மதங்கே
பவச்சக்தி தீக்ஷfணாக்ர பின்னா ஸதூரே
வநச்யந்து தே சூர்ணித க்ரௌஞ்ச சைல (29)
ஜநித் பிதாச ஸ்வபுத்ரா பராதம்
ஸஹுதே ந கிம் தேவசேனாதி நாத
அஹும் சாதிபாலோ பவான் லோக தாத
க்ஷமஸ்வாபாரதம் ஸமஸ்தம் மஹுச (30)
நம கேகினே சத்தயே சாபி துப்யம்
நமச்சாக துப்யம் நம குக்குடாய
நம ஸிந்தவே ஸிந்து தேசாய துப்யம்
புன ஸ்கந்த மூர்த்தே நமஸ்தே நமோஸ்து (31)
ஜயாநந்த பூமன் ஜயாபார தாமன்
ஜயாமோக கீர்த்தே ஜயாநந்த மூர்த்தே
ஜயாநந்த ஸிந்தோ ஜயாசேஷபந்தோ
ஜயத்வம் ஸதாமுக்திதானேசஸJனோ (32)
புஜங்காக்யவ்ருத்தேன க்லுப்தம் ஸ்தவம் ய
படேத் பக்தியுக்தோ குஹும் ஸம்ப்ரணம்ய
ஸபுத்ரான் களத்ரம் தனம் தீர்கமாயுர்
லபேத் ஸ்கந்தஸாயுஜ்யமந்தே நரஸ்ஸ (33)
பன்னீர் இலை விபூதிச்சிறப்பு:
பன்னீரு இலை விபூதி மகிமை
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்களுக்கு பன்னீ(னி)ரு இலை விபூதி பிரசாதம் காலம் காலமாக வழங்கப்பட்டு வருகிறது. இலை விபூதியின் மகத்துவம்
அபிநபகுப்தர் என்ற சித்தர் ஒருவர் கெடுதல் செய்யும் நோக்கத்தில் ஆதிசங்கரருக்கு செய்வினை, ஏவல், பில்லி, சூனியம் செய்தார். இதனால் சூலைநோய் உள்பட பல்வேறு நோய்களுக்கு ஆதிசங்கரர் உட்பட்டார். மனமுடைந்த ஆதிசங்கரர் இறைவனை நாடி மனமுறுக வேண்டினார். இருந்தும் அவருக்கு நோய் குணமாகவில்லை. அவர் ஒவ்வொரு கோவிலாக சென்று இறுதியாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமிக்கு வந்து மனமுறுக வேண்டினார். அப்போது ஆதிசங்கரர் கையில் பன்னீரு இலை விபூதி பிரசாதம் வழங்கப்பட்டது. பிரசாதத்தை உடலில் பூசிக், அதை உள்கொண்டார். சில நாட்களில் அவரை தொற்றி இருந்த நோய்கள் அனைத்தும் முற்றிலும் குணமடைந்தது.
அதன் பின்னர் ஆதிசங்கரர் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி மீது அதிக பற்று கொண்டு மனமுறுகி 32 பாடல்கள் கொண்ட சுப்பிரமணிய புஜங்க ஸ்லோகம் பாடினார். அந்த 32 பாடல்களும் கோவிலில் சிறப்பு, சுவாமியின் பெருமை போன்றவை குறித்து இருந்தது. அதில் 25வது பாடலில் இலை விபூதியின் மகிமை பற்றி பெருமை பட பாடினார்.
சுப்பிரமண்யா! நின் இலை விபூதிகளை கண்டால் கால் கை வலிப்பு, காசம், கயம், குட்டம் முதலிய நோய்கள் நீங்கும். பூதம், பிசாசு, தீவினை யாவும் விட்டு விடும் என்று சுப்பிரம்மண்ய புஜங்கத்தில் ஆதிசங்கரர் செல்லி இருக்கிறார்.
பன்னீர் இலை என்பதற்கு அர்த்தம். இலையில் மொத்தம் 12 நரம்புகள் இருக்கும். முருக பெருமான் தனது 12 கரங்களால் இந்த பிரசாதத்தை வழங்கியதால் இந்த பன்னீர் இலையில் முருக பெருமானின் பன்னிரு கைகள் போன்று இருக்கும். பன்னிரு இலை என்ற பெயர் காலப்போக்கில் மருவி பன்னீர் இலை என்று கூறப்படுகிறது.
முருக பெருமானை பூஜித்த தேவர்கள் அனைவரும் இந்த பன்னீர் மரங்களாக இருப்பதாகவும், அதில் இருந்து இருந்த பெறப்படும் பன்னீர் இலைகள் பிரசாதமாக வழங்கப்படுவதால் அதற்கு தனி மகத்துவம் இருப்பதாக கருதப்படுகிறது.
இந்த பன்னீர் இலை விபூதி பிரசாதம் தினமும் காலை விஸ்வரூப தரிசனத்தின் போது சுவாமி பாதத்தில் வைத்து பூஜித்து பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. வேறு எந்த கோவிலிலும் இல்லாத சிறப்பாக திருச்செந்தூர் கோவிலில் இந்த இலை விபூதி பிரசாதம் வழங்கப்படுகிறது.
இந்த இலையை நேராக வைத்து பார்த்தால் முருக பெருமானின் வேல் போன்று காட்சி அளிக்கும்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்களுக்கு பன்னீ(னி)ரு இலை விபூதி பிரசாதம் காலம் காலமாக வழங்கப்பட்டு வருகிறது. இலை விபூதியின் மகத்துவம்
அபிநபகுப்தர் என்ற சித்தர் ஒருவர் கெடுதல் செய்யும் நோக்கத்தில் ஆதிசங்கரருக்கு செய்வினை, ஏவல், பில்லி, சூனியம் செய்தார். இதனால் சூலைநோய் உள்பட பல்வேறு நோய்களுக்கு ஆதிசங்கரர் உட்பட்டார். மனமுடைந்த ஆதிசங்கரர் இறைவனை நாடி மனமுறுக வேண்டினார். இருந்தும் அவருக்கு நோய் குணமாகவில்லை. அவர் ஒவ்வொரு கோவிலாக சென்று இறுதியாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமிக்கு வந்து மனமுறுக வேண்டினார். அப்போது ஆதிசங்கரர் கையில் பன்னீரு இலை விபூதி பிரசாதம் வழங்கப்பட்டது. பிரசாதத்தை உடலில் பூசிக், அதை உள்கொண்டார். சில நாட்களில் அவரை தொற்றி இருந்த நோய்கள் அனைத்தும் முற்றிலும் குணமடைந்தது.
அதன் பின்னர் ஆதிசங்கரர் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி மீது அதிக பற்று கொண்டு மனமுறுகி 32 பாடல்கள் கொண்ட சுப்பிரமணிய புஜங்க ஸ்லோகம் பாடினார். அந்த 32 பாடல்களும் கோவிலில் சிறப்பு, சுவாமியின் பெருமை போன்றவை குறித்து இருந்தது. அதில் 25வது பாடலில் இலை விபூதியின் மகிமை பற்றி பெருமை பட பாடினார்.
சுப்பிரமண்யா! நின் இலை விபூதிகளை கண்டால் கால் கை வலிப்பு, காசம், கயம், குட்டம் முதலிய நோய்கள் நீங்கும். பூதம், பிசாசு, தீவினை யாவும் விட்டு விடும் என்று சுப்பிரம்மண்ய புஜங்கத்தில் ஆதிசங்கரர் செல்லி இருக்கிறார்.
பன்னீர் இலை என்பதற்கு அர்த்தம். இலையில் மொத்தம் 12 நரம்புகள் இருக்கும். முருக பெருமான் தனது 12 கரங்களால் இந்த பிரசாதத்தை வழங்கியதால் இந்த பன்னீர் இலையில் முருக பெருமானின் பன்னிரு கைகள் போன்று இருக்கும். பன்னிரு இலை என்ற பெயர் காலப்போக்கில் மருவி பன்னீர் இலை என்று கூறப்படுகிறது.
முருக பெருமானை பூஜித்த தேவர்கள் அனைவரும் இந்த பன்னீர் மரங்களாக இருப்பதாகவும், அதில் இருந்து இருந்த பெறப்படும் பன்னீர் இலைகள் பிரசாதமாக வழங்கப்படுவதால் அதற்கு தனி மகத்துவம் இருப்பதாக கருதப்படுகிறது.
இந்த பன்னீர் இலை விபூதி பிரசாதம் தினமும் காலை விஸ்வரூப தரிசனத்தின் போது சுவாமி பாதத்தில் வைத்து பூஜித்து பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. வேறு எந்த கோவிலிலும் இல்லாத சிறப்பாக திருச்செந்தூர் கோவிலில் இந்த இலை விபூதி பிரசாதம் வழங்கப்படுகிறது.
இந்த இலையை நேராக வைத்து பார்த்தால் முருக பெருமானின் வேல் போன்று காட்சி அளிக்கும்.
1.பன்னீர் இலையில் உள்ள பூவில் உள்ள சாந்த குண சக்தி நிறைவாக உள்ளது. அது நமது உடலுக்குச் சில நன்மைகளைத் தருகிறது என்று சித்தவைத்தியம் கூறுகிறது.
2.இறைவனுடைய பூஜைக்குறியது துளசி வில்வ இலை, வன்னி இலை. அதே போல் இறைவனுடைய பூஜைக்குரியதாகப் பன்னீர் இலை உள்ளது.
3.பன்னீர் இலையில் உள்ள 12 நரம்புகள் முருகப்பெருமானின் பன்னிரு திருக்கரங்களுச் சமம் என்று கூறுவர். 4.திருவாடுதுறை திருப்பனந்தாள் குரு மகாசந்நிதானங்கள் நடராஜப் பெருமானை வணங்குவோர்க்குப் பன்னீர் இலையில் விபூதிப் பிரசாதம் வழங்கி வருகிறார்கள்.
5.திருநீற்றைப்ப பன்னீர் இலையில் பத்திரமாக வைத்துக் கொள்வது செல்வத்தைச் சேமிப்பது போலாகும் என்று பக்தர்கள பன்னீர் இலை வீபூதியைப் பக்தியுடன் பத்திரமாக வைத்துக் கொள்கிறார்கள்.
6.பக்தர்கள் பன்னீர் இலை விபூதியுடன் இலையையும் உண்டு நோய்களிலிருந்து குணமடைகிறார்கள். அருளாளர் ஆதிசங்கரர் நோய் நீக்கும் உண்மையையும் பெருமையையும் வல்லமையையும் தனது பாடல்களில் எடுத்தியம்புகிறார். 7.பன்னீர் இலை விபூதியைப் பக்தர்கள் இல்லங்களுக்கு எடுத்துச் சென்று பூஜை அறைகளில் பத்திரப்படுத்தி வியாதிகள் வந்தால் செந்தில் முருகனை வேண்டி அணிந்து கொள்கிறார்கள். ஆடு, மாடுகள் நோய் கண்டால் நோய் நீங்க வழிபட்டுப் பன்னீர் இலை விபூதியினை மருந்தாகக் கொடுத்து நோய் நீங்கியதும் திருச்செந்தூர் முருகனுக்குக் காணிக்கையாக ஆடு மாடுகளைச் செலுத்திகிறார்கள். பன்னீர் இலை விபூதியினை மருந்தாக் கொடுத்து நோய் நீங்கியதும் திருச்செந்தூர் முருகனுக்குக் காணிக்கையாக ஆடு மாடுகளைச் செலுத்துகிறார்கள். பன்னீர் இலையும் நற்சந்தனமும் பக்தர்களுக்கு வழங்கபபடுகிறது.
2.இறைவனுடைய பூஜைக்குறியது துளசி வில்வ இலை, வன்னி இலை. அதே போல் இறைவனுடைய பூஜைக்குரியதாகப் பன்னீர் இலை உள்ளது.
3.பன்னீர் இலையில் உள்ள 12 நரம்புகள் முருகப்பெருமானின் பன்னிரு திருக்கரங்களுச் சமம் என்று கூறுவர். 4.திருவாடுதுறை திருப்பனந்தாள் குரு மகாசந்நிதானங்கள் நடராஜப் பெருமானை வணங்குவோர்க்குப் பன்னீர் இலையில் விபூதிப் பிரசாதம் வழங்கி வருகிறார்கள்.
5.திருநீற்றைப்ப பன்னீர் இலையில் பத்திரமாக வைத்துக் கொள்வது செல்வத்தைச் சேமிப்பது போலாகும் என்று பக்தர்கள பன்னீர் இலை வீபூதியைப் பக்தியுடன் பத்திரமாக வைத்துக் கொள்கிறார்கள்.
6.பக்தர்கள் பன்னீர் இலை விபூதியுடன் இலையையும் உண்டு நோய்களிலிருந்து குணமடைகிறார்கள். அருளாளர் ஆதிசங்கரர் நோய் நீக்கும் உண்மையையும் பெருமையையும் வல்லமையையும் தனது பாடல்களில் எடுத்தியம்புகிறார். 7.பன்னீர் இலை விபூதியைப் பக்தர்கள் இல்லங்களுக்கு எடுத்துச் சென்று பூஜை அறைகளில் பத்திரப்படுத்தி வியாதிகள் வந்தால் செந்தில் முருகனை வேண்டி அணிந்து கொள்கிறார்கள். ஆடு, மாடுகள் நோய் கண்டால் நோய் நீங்க வழிபட்டுப் பன்னீர் இலை விபூதியினை மருந்தாகக் கொடுத்து நோய் நீங்கியதும் திருச்செந்தூர் முருகனுக்குக் காணிக்கையாக ஆடு மாடுகளைச் செலுத்திகிறார்கள். பன்னீர் இலை விபூதியினை மருந்தாக் கொடுத்து நோய் நீங்கியதும் திருச்செந்தூர் முருகனுக்குக் காணிக்கையாக ஆடு மாடுகளைச் செலுத்துகிறார்கள். பன்னீர் இலையும் நற்சந்தனமும் பக்தர்களுக்கு வழங்கபபடுகிறது.
Contact:
B.Muthukarthikeyan deekshidar
Ph:-09994444768,9443644768
B.Muthukarthikeyan deekshidar
Ph:-09994444768,9443644768